Friday, December 24, 2010

இரு வரிகளில் என்னவளின் அழகிய தேவதை உலகம் !!!!!


பூக்கள் தன் வாழ்க்கை ஒரு நாளில் முடிவதை எண்ணி வருத்தப்பட்டது

நீ பூ வைக்க ஆரம்பித்த பொழுது !!!!!


====================================

நிலவிற்கும் இறைவன் போலி படைத்துள்ளான்......

உன் முகமே அதற்கு சாட்சி !!!!!

====================================

என் கவிதை க்கு சிறகு முளைத்ததை போல உணர்ந்தேன்.......

உன் துப்பட்டா காற்றில் சிறகாய் பறக்கும் போது !!!!

====================================

அடியே உன்னை தேவதை என்று வர்ணிப்பதா....


இல்லை தேவதையை நீ என வர்ணிப்பதா......

====================================

உன்னை பற்றி எந்த கவிதையும் நான் எழுதுவதில்லை....

நான் எழுதும் கவிதைகள் "நீ" மட்டும் தான் !!!

====================================

கருப்பு வெள்ளையாய் இருந்திருந்தால் வானவில் எவ்வளவு அழகாய் இருந்திருக்கும்......

உன் "கண்களை" போல்..!!!!

====================================

கடல் அலையும் பின் வாங்குகிறது .......

உன் காலடி பட்ட தடத்தை அழிக்க மனம் இல்லாமல்....

====================================

சூரியகாந்தியும் தலை திருப்பி கொள்கிறது நீ செல்லும் வழியில்......

உன் கூந்தலில் குளிர் தேட.....!!!!

====================================

தினம் தினம் நான் முத்துகுளிக்கிறேன்......

நீ சிரிக்கும் பொது சிதறும் முத்துக்களை சேகரிப்பதற்கு...!!!

====================================

காற்றும் கூட குழந்தையாய் மாற துடிக்கிறது உன் கொஞ்சலுக்காக.....

நீ உன் கைகளை காற்றில் ஆட்டி பேசும் போது....

====================================

நீ பூவை உன் தலையில் சூடும் போது பூ கூட உன்னை திரும்ப கேட்கும்......

"என்னை நீ சூடுகிறாயா..., இல்லை நான் உன்னை சூடுகிறேனா ????? """

====================================

அது ஏனோ தெரிய வில்லை என் கடிகார முள் மட்டும் நகராமல் அப்படியே நின்று விடுகிறது......

உன்னுடன் அமர்ந்து பேச ஆரம்பிக்கும் பொழுது....!!!!!

====================================

இரவில் விழித்திருக்கும் நிலவு வானில்...

பகலில் விழித்திருக்கும் நிலவு பூமியில் " நீ " ..!!!!

====================================

வானவில்லும் வருந்தியது கருப்பு நிறம் அதனுள் இல்லாததால்.....

உன் கண் புருவங்களை பார்த்த பின்.....!!!

====================================

சிறு குழந்தை கூட பொறமை படும் அவள் சிரிப்பை பார்த்து.....
தன் சிரிப்பை விட அவளுடையது இனிமையானது என்று...

====================================

முக அலங்காரம்

அவள் அழகை மறைக்கும் "முகமூடி"

====================================

உனக்கு மட்டும் எதற்கு பெயர் ?

தேவதைகளுக்கு என்று ஒரு பெயர் இல்லாத போது ?

====================================

2 comments:

Anonymous said...

Mohegan Casino Near Me | Casino in Japan 카지노 카지노 leovegas leovegas 1275Super Bowl Bookie Odds - Ajiadin123

kachinakaegi said...

Casino Slot Machines - drmcd
A very simple and elegant, 삼척 출장안마 video-game casino 청주 출장마사지 slot machine. Play 진주 출장샵 one 양주 출장마사지 of these simple casino slots on 동해 출장안마 desktop and mobile. Enjoy free spins! Jackpot.