Monday, December 27, 2010

என் காதல் கதை.......




என் காதல் கதை.......

என்னவளும் இருப்பதால் இது ஒரு காதல் கவிதை......

முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட கவிதையா இல்லையா என்பதை இறுதியில் தெரிய படுத்துகிறேன்........

================================

அவளை ரசித்த நாட்கள்.......

என் அம்மாவிற்கு பிறகு மிகவும் நேசிக்க பிடித்தது அவளை......

அவள் பெற்றோருக்கு ஆயிரம் நன்றிகள் அவளுக்கு அப்படியோர் மிக மிக பொருத்தமாக பெயர் வைத்ததற்கு.....

அவள் என் கல்லூரி தோழி என் இதயத்தை களவாடிய தோழியும் கூட......

தினம் தினம் அவளை ரசிக்க தோன்றியது....அவளை பற்றி எழுதியதை கவிதை என்றனர் நண்பர்கள்.....

அவளுடன் பேருந்தில் பயணிக்கும் போதெல்லாம் ஏன் என் கல்லூரி இமயம் வரை இருக்க கூடாது என்று யோசித்திருக்கிறேன்.....

மென்மையின் அர்த்தத்தை அவள் ஸ்பரிசங்கள் தான் எனக்கு உணர்த்தியது.........

அவள் யதார்த்தமாய் என்னை பார்க்கும் ஒவ்வொரு நொடியும் ஒரு ஒரு யுகம் வாழ்ந்து முடித்தேன்.......

மாலையில் அவள் என்னை கடக்கும் அந்த 3 நிமிடத்திற்கு.....
நான் எனது 8 மணி நேர வகுப்பையும் புறக்கணித்துவிட்டு காத்திருந்தேன் !!!!!

அவள் சிரிக்கும் போது விழும் கண்ண குழியில் நானும் விழுந்து எழுந்து கொண்டிருந்தேன்....

பூமிக்கு வலிக்காமல் அவள் நடப்பதை நாள் முழுதும் பார்த்து கொண்டிருப்பேன் கல்லூரிக்கு செல்லாமல்......

அவளுக்காக இல்லை என்றாலும் அவள் பெயருக்காவது இருக்கட்டும் என என்இரத்தத்தை சிந்தினேன்.......

நான் பிறவி பயனை உணர்ந்தேன் அவளை பார்த்து பின்பு....ஒரு நாள் அல்ல இரு நாள் அல்ல பல நாட்கள் அவளுக்கு தெரியாமலேயே அவள் நினைவுகளுடன் வாழ்ந்து விட்டேன்.......அதுவே இந்த ஜென்மத்தில் போதுமென்று நினைத்திருந்தேன்.....

எல்லோரும் தேவதை போல் இருக்கும் பெண்ணை காதலிப்பார்கள்.....ஆனால் எனக்கு தேவதையையே காதலிக்கும் வாய்ப்பு வரும் என்று நான் எண்ண வில்லை.......

என் தோட்டத்தின் காய்ந்த சருகுகள் கூட திரும்ப உயிர் பெற்றது அவள் கொலுசு ஓசையை கேட்க தொடங்கியவுடன் ..!!!!!

என் உலகமும் மாறியது........என் கற்பனைகளுக்கு நிஜ வடிவம் கிடைத்தது.......என் அனுமானங்கள் உயிர் பெற்றது........

என் வாழ்கையில் முழுவதுமாக அவள் கலந்தாள்....

உறக்கங்களில் கனவாக......!!!

நினைவில் நினைவுகளாக......!!!


Friday, December 24, 2010

இரு வரிகளில் என்னவளின் அழகிய தேவதை உலகம் !!!!!


பூக்கள் தன் வாழ்க்கை ஒரு நாளில் முடிவதை எண்ணி வருத்தப்பட்டது

நீ பூ வைக்க ஆரம்பித்த பொழுது !!!!!


====================================

நிலவிற்கும் இறைவன் போலி படைத்துள்ளான்......

உன் முகமே அதற்கு சாட்சி !!!!!

====================================

என் கவிதை க்கு சிறகு முளைத்ததை போல உணர்ந்தேன்.......

உன் துப்பட்டா காற்றில் சிறகாய் பறக்கும் போது !!!!

====================================

அடியே உன்னை தேவதை என்று வர்ணிப்பதா....


இல்லை தேவதையை நீ என வர்ணிப்பதா......

====================================

உன்னை பற்றி எந்த கவிதையும் நான் எழுதுவதில்லை....

நான் எழுதும் கவிதைகள் "நீ" மட்டும் தான் !!!

====================================

கருப்பு வெள்ளையாய் இருந்திருந்தால் வானவில் எவ்வளவு அழகாய் இருந்திருக்கும்......

உன் "கண்களை" போல்..!!!!

====================================

கடல் அலையும் பின் வாங்குகிறது .......

உன் காலடி பட்ட தடத்தை அழிக்க மனம் இல்லாமல்....

====================================

சூரியகாந்தியும் தலை திருப்பி கொள்கிறது நீ செல்லும் வழியில்......

உன் கூந்தலில் குளிர் தேட.....!!!!

====================================

தினம் தினம் நான் முத்துகுளிக்கிறேன்......

நீ சிரிக்கும் பொது சிதறும் முத்துக்களை சேகரிப்பதற்கு...!!!

====================================

காற்றும் கூட குழந்தையாய் மாற துடிக்கிறது உன் கொஞ்சலுக்காக.....

நீ உன் கைகளை காற்றில் ஆட்டி பேசும் போது....

====================================

நீ பூவை உன் தலையில் சூடும் போது பூ கூட உன்னை திரும்ப கேட்கும்......

"என்னை நீ சூடுகிறாயா..., இல்லை நான் உன்னை சூடுகிறேனா ????? """

====================================

அது ஏனோ தெரிய வில்லை என் கடிகார முள் மட்டும் நகராமல் அப்படியே நின்று விடுகிறது......

உன்னுடன் அமர்ந்து பேச ஆரம்பிக்கும் பொழுது....!!!!!

====================================

இரவில் விழித்திருக்கும் நிலவு வானில்...

பகலில் விழித்திருக்கும் நிலவு பூமியில் " நீ " ..!!!!

====================================

வானவில்லும் வருந்தியது கருப்பு நிறம் அதனுள் இல்லாததால்.....

உன் கண் புருவங்களை பார்த்த பின்.....!!!

====================================

சிறு குழந்தை கூட பொறமை படும் அவள் சிரிப்பை பார்த்து.....
தன் சிரிப்பை விட அவளுடையது இனிமையானது என்று...

====================================

முக அலங்காரம்

அவள் அழகை மறைக்கும் "முகமூடி"

====================================

உனக்கு மட்டும் எதற்கு பெயர் ?

தேவதைகளுக்கு என்று ஒரு பெயர் இல்லாத போது ?

====================================


உனக்காக என்னை விட

என் இதயம் சிந்தித்த பல துளிகள்

இங்கே சமர்பிக்கிறேன்....


இதை கவிதை என்று சொல்வதை விட "என்னவளின் நினைவுகள்" என்று சொல்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் !!!!!!

<3====================<3=======================<3